புகையிரத மிதிபலகையில் பயணித்த இரு இளைஞர்கள் பாலத்தில் மோதிப் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/04/2_30.html
மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மிதிபலகையில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் மீஓயா பாலத்தில் மோதுண்டு பரிதாபமாக மரணமடைந்தனர். மரணமானவர்கள் ராகம மற்றும் ஹிதோகம ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
16 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு பரிதாபமாக மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் உடல்கள் கல்கமுவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
