கடந்த ஆட்சியில் முறைகேடான நிதிப் பாவணை பற்றிய தகவல்கள் ஊர்ஜிதம் - ராஜித சேனாரத்ன
http://weligamanewsblog.blogspot.com/2015/04/blog-post_97.html
கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் முறைகேடாக நிதி பாவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக கபினட் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற கபினட் தீர்மானங்கள் பற்றி அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச நிறுவனங்களின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இதுவரை வந்த எந்த அரசாங்கவும் இத்தகைய முறைகேடான செயலைச் செய்யவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
