ஜனாதிபதி தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலிய மாவட்ட மாநாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலிய மாவட்ட மாநாடு நேற்று (21) நுவரெலியா மாவட்ட மாநகரசபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 

 நுவரெலியா மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர்- பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். 

இந்நிகழ்வில் எஸ்.பி. திஸாநாயக்க, ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரதேசசபை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
-et


Related

Local 6773962962387526011

Post a Comment

emo-but-icon

item