பிரதமருக்கு எதிரான பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_74.html
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளனர். சபாநாயகரின் அனுமதி கிடைத்ததும் அதனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளதாக பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
