பிறந்த நாளன்று தூக்கில் தொங்கிய மாணவி (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_26.html
ஹட்டன் கொட்டகல பிரதேசத்தில் உயர் தரத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுப் பகல் 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கொட்டகல பிரதேசத்தில் வசிக்கும் உதய குமார் ப்ரவீனா என்ற 19 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது 19வது பிறந்த தினம் நேற்றென்பது குறிப்பிடத்தக்கது. காதல் தொடர்பொன்று காரணமாக குறித்த மாணவி பாடசாலைக்கு அனுப்பப்படாமல் வீடில் இருந்தே கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


