ஈராக்­கில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­தல் 45 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி

ஈராக்­கிய அன்பர் மாகா­ணத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் புதி­தாக நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 45 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி­யா­கி­யுள்­ளனர்.

பலுஜா மற்றும் சமாரா நகர்­களை இணைக்கும் வீதியில் அமைந்­துள்ள தர்தார் பிர­தே­சத்­தி­லுள்ள பொலிஸ் தலைமை யகத்தில் வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட 3 வாக­னங்­களை செலுத்தி வந்து தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளனர்.

இந்தத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களில் உயர்­மட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் பலர் உள்­ள­டங்­கு­வ­தாக பொலிஸ் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த சில வாரங்­க­ளாக அன்பர் மாகா­ணத்தில் அர­சாங்கப் படை­யி­ன­ருக்கும் தீவி­ர­வா­தி­க­ளுக்­கு­மி­டையே மோதல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்தத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களால் மேற்­படி 21 ஆவது படை­யணிப் பிரி­வொன்றின் தலைமைய கத்திலிருந்த ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் பாரிய வெடிப்பு இடம்­பெற்­றுள்­ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த உயர் மட்ட அதிகாரி களில் பிரிகேடியர் ஜெனரல் மூஸா ஹைதர் உள்ளடங்குகிறார்.


Related

World 1910533540137097490

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item