கானா தலை­ந­கரில் பெற்றோல் நிலை­யத்தில் தீ அனர்த்தம்; 150 பேர் உயி­ரி­ழப்பு

கானாவின் தலை­நகர் அக்­ரா­வி­லுள்ள பெற்றோல் நிலை­ய­மொன்றில் இடம்­பெற்ற தீ அனர்த்­தத்தில் சிக்கி 150 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர். 

 அந்­ந­கரில் இரு நாட்­க­ளாக அடை மழை கார­ண­மாக இடம்­பெற்ற வெள்ளத்தால் பலர் வீடு வாசல்­களை விட்டு இடம்­பெ­யர்ந்­துள்ள நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. 

 தீ அனர்த்­தத்தில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் வெள்ளம் கார­ண­மாக தாம­த­ம­டை­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பெற்றோல் நிலைய தீ அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களைத் தேடும் பணி தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதால் உயி­ரி­ழந்­த­வர்கள் தொகை மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. 

 இந்­நி­லையில் அந்­நாட்டு ஜனா­தி­பதி ஜோன் மஹாமா தீ அனர்த்­தத்­திற்­குள்­ளான பெற்றோல் நிலையம் அமைந்துள்ள பிராந்தியத்திற்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். -VK


Related

World 8518561312187137100

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item