மா பெரும் இரத்த தான முகாம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_542.html
கல்குடா கலாச்சார அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 30ம் திகதி சனிக்கிழமை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரத்த தான முகாம் மீராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் காலை 8 முதல் நடை பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"உதிரம் கொடுப்போம் - உயிர்களைக் காப்போம்" என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
இது பற்றிய மேலதிக தகவல்களை 075 638 6481 எனும் தொலை பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

