பாகிஸ்­தானில் அனல் காற்றால் உயி­ரி­ழந்­த­வர்கள் தொகை 650 ஆக உயர்வு

தென் பாகிஸ்­தானில் கடந்த 3 நாட்­க­ளாக வீசிய அனல் காற்றில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 650 ஆக உயர்ந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து தென் சிந்து மாகா­ணத்தில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி அனல் காற்றால் பாதிக்­கப்­ப­ட­வர்­க­ளுக்கு உட­னடி உத­வி­களை வழங்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தேசிய அனர்த்த முகா­மைத்­துவ அதி­கார சபைக்கு பாகிஸ்­தா­னிய பிர­தமர் நவாஸ் ஷெரீப் உத்­த­ர­விட்­டுள்ளார்.

அனல் காற்று வீசி வரும் பிராந்­தி­யங்­களில் இரா­ணு­வத்­தி­ன­ரை நிய­மிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அனல் காற்றால் உயி­ரி­ழந்­த­வர்­களில் அநேகர் குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­க ளைச் சேர்ந்த வயோ­தி­பர்­க­ளாவர். 

 உயர் வெப்­ப­நிலை நிலவும் கராச்சி நக­ரி­லேயே அதி­க­ளவு மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அங்கு 45 பாகை­ செல்­சியஸ் வெப்­ப­நிலை நில­வு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. அத்­துடன் இந்த அனல் காற் றால் நூற்­றுக்­க­ணக்­கானோர் உடல் நலப் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளாகி துன்­பப்­பட்டு வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. 

 பிர­தமர் மின் துண்­டிப்­புகள் மேற்­கொள்ளப்­ப­டாது என அறி­வித்­துள்ள போதும் ரம­ழான் நோன்பு காலத்தில் பகல் பொழு தில்கடும் வெப்பத்தைத் தணிவிக்க குளிரூட்டிகளின் பாவனை அதிகரித்துள்ளதால் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் துண்டிப்புகளை தவிர்க்க முடியாதுள்ளதாக கூறப்படு கிறது.




Related

World 328378465346848128

Post a Comment

emo-but-icon

item