ஹக்கீமிடமிருக்கும் அமைச்சை பௌத்தர் ஒருவரிடம் வழங்குக

புனித தலங்களுக்கு ஆபத்து என்கிறது பொது பல சேனா 

 நாட்டின் பெரும்­பா­லான நக­ரங்­களில் பௌத்த புனித ஸ்தலங்கள் அமைந்­தி­ருப்­பதால் நக­ரங்­களின் அபி­வி­ருத்­திக்கு பொறுப்­பான அமைச்சர் ஹக்கீம் பௌத்த நிலை­யங்­களின் காணி­களை கையேற்றுக் கொள்­ளலாம் என பொது­ப­ல­சேனா அச்சம் தெரி­வித்­துள்­ளது. 

 கிரு­லப்­பனை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது அதன் தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­தெ­னிய நந்த தேரர் மேற்­கண்­ட­வாறு அச்சம் தெரி­வித்தார். 

 அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 
பல நக­ரங்­களில் பௌத்த நிலை­யங்­களும், விகா­ரை­களும், புனித பூமி­களும் அமைந்­துள்­ளன. நக­ரங்­களின் அபி­வி­ருத்­திக்­குப்­பொ­றுப்­பான அமைச்­ச­ராக முஸ்லிம் ஒருவர் இருப்­பது பௌத்­த­துக்கும் ஆபத்­தா­ன­தாகும்.  பௌத்த காணிகள் வேறு தேவை­க­ளுக்­காக கையேற்றுக் கொள்­ளப்­ப­டலாம். 

 எனவே நகர அபி­வி­ருத்தி அமைச்சு பௌத்தர் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்­க­வுள்ளோம். ஜனா­தி­பதி எமது கோரிக்கையை நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கையுண்டு என்றார்.


Related

Local 6275152531128149202

Post a Comment

emo-but-icon

item