போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன்!- மகிந்த

தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசியப்பட்டியலில் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற கோரளை விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் போட்டியிடுவதென்றால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவோம். தேசிய பட்டியலில் இடம் தருவதாக கூறினாலும் வெற்றி பெற்ற பின்னர் பெயரை வெட்டி விடுவார்கள்.
இதனால் பொது வெற்றிலை சின்னத்தில் நாம் போட்டியிடுவோம் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.


Related

Local 786041636852924950

Post a Comment

emo-but-icon

item